என் இதயத்தில் நீனில்லை என்கிறேன்
உன் இதயமே நான் தானடி என்கிறாய்
என் பார்வையில் நீயில்லை என்கிறேன்
உன் கண்ணின் மணியே நான் தான்டி என்கிறாய்
என் மனசுக்குள் நீயில்லை என்கிறேன்
உன் மனசாட்சியே நான் தானடி என்கிறாய்
உன் வார்த்தைகள் பொய் என்கிறேன்
அதிலுள்ள வார்த்தைகளே நான் தானடி என்கிறாய்
மாலையிட வருவாயா என்கிறேன்
உன் கழுத்தே நான் தானடி என்கிறாய்
என் சுவாசத்திற்கு உயிர் கொடு என்கிறேன்
உன் சுவாசமே நான் தானடி என்கிறாய்
என்னை ஞாபகம் இருகிறதா என்கிறேன்
மறந்தால் தானே நினைக்க என்கிறாய்
கடைசி வரை கூட இருப்பாயா என்கிறேன்
உன் உயிரே நான் தான்டி என்கிறாய்
உள்ளம் திறந்து கேட்கிறேன்
உதரிவிடாதே என்கிறேன்
உரிமையுடன் சொல்கிறேன்
நீயின்றி நானில்லை என்கிறாய்
இத்தனையும் சொன்ன நீ இன்று
ஏன் என்னை ஏற்க மறுக்கிறாய்??