*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

2/24/2009

என் குட்டிச் செல்லமே உனக்காக....

என் அழகு தேவதைதே...

உனை செல்லமாய்.....
கொஞ்சிடும் பொழுது தான்
எத்தனை இன்பம் நெஞ்சில்...
உன் விழிகள்.....
கறுப்பு வெள்ளை பூவாய்
ஆயிரம் கதை பேசுகிறது என்னிடம்

அழகிய இதழ் கொண்டு சிரிக்கிறாய்
சிரிப்பினில் தான் எத்தனை அழகு
எங்கே வாங்கினாய் இந்த புன்னகை பூவினை
எத்தனை ஜென்மமும் எடுக்கலாம்....
உன்னோடு இருக்கமுடியுமென்றால்....
பூக்களின் வண்ணங்களோடு வளரும் உன்னோடு
கலந்துவிட்டது எந்தன் உள்ளம்

இரு விழிகள் கொண்டு
காண்பவரை ஈர்த்திடும்...,
குட்டிக் குட்டி கவிதையா நீ....

2/15/2009

இறுதி முடிவு.............!!!

அன்று உன்னருகில் நானிருக்கையில்

தெரியவில்லை உனக்கு என் அருமை
ஆனால் இன்று விம்மித்தவிக்கிறாய்...!
புரியவில்லை...எனக்கு .....................!!!
என்னை உதறிவிட்ட உனக்கு
என் நினைவுகள் மட்டும் ஏன் என்று
உண்மைதான்......
உன்னருகிலேயே வாழ ஆசைப்பட்டதுண்டு
அன்று புரியவில்லை பேதை இவளுக்கு
உன் வஞ்சக மனம்.....!
என்ற போதும் நீ துடிப்பதை கண்டு
மனம் வாடுகின்றேன் .....
ஏனோ தெரியவில்லை உனை வெறுத்த எனக்கு
காதலை மட்டும் மறக்கத் தெரியவில்லை...!
அன்றொரு நாள் ஏங்கினேன்
உனை பார்க்கமாட்டோமா என....!
ஆனால் இன்று சொல்கிறேன்
என் கண்களுக்கு......
இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அவனை பார்த்திடாதே என...!

2/12/2009

!!நிஷாவின் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!

அன்றாடம் ஆயிரம் பூக்கள் பூக்கலாம்
ஆனாலும் காயாகும் சில பூக்கள் மட்டுமே
எல்லோருக்கும் காதல் வரும் என்றாலும்
கல்யாண வைபோகம் சிலபேர்க்குத்தான்


இங்கு வருகை தந்த மற்றும் வருகை தருகின்ற
அனைவருக்கும் என் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
உங்கள் அனைத்து எதிர்ப்பார்ப்புக்களும்
இனிதே நிறைவேற வேண்டுமென
எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றேன்




என்றென்றும் புன்னகையுடன்
உங்கள் !!நிஷா!!

2/11/2009

!!!நான்!!!


அழகிய விழிகொண்டு
இராவானில் உலாவரும்
நிலவுடன்கதை பேசி
நீலவான ஓடையில் நீந்திடும்
குட்டிக் குட்டி கவிதை நானே

!!!என்ன இருந்த போதும் அவன் எனதில்லையே!!!


என் தோட்டத்தில் நீந்திடும் தென்றல் அவன்
என் வீணையில் மீட்டிடும் ராகமும் அவன்
எல்லாமும் நீயாக இருக்கின்றாய்-ஆனால்
என்ன இருந்த போதும் எனதில்லையே
அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்


நட்பே உனை நேசிக்கிறேன்


என் அன்பு DEVIL க்கு
சொல்லாமலே சென்றிடும் சொந்தங்களில்
சொந்தம் சொல்லி வந்தது உன் உறவு
உன்னிடம் நான் சொல்வதெல்லாம்
ஒன்றே ஒன்று தான்
மலையளவு புகழ் வந்தாலும்
மடி நிறைய பொருள் சேர்ந்தாலும்
எத்தனை உறவுகளானாலும்
நட்பே உன்னை நேசித்திடுவேன்
என்றும் மாறாத அன்போடு

இப்படிக்கு உங்கள் ப்ரியமானதோழி