*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

7/15/2009

சம்மதம் கொடுத்திடுவாயா?


எங்கிருந்தாய் நீ இத்தனை காலமும்.. இத்தனை காலமும் உனக்காக தான் காத்திருந்தேனா? புரியவில்லையே... அன்று நீ காதைலை சொல்லிய பொழுதினில் ,, என்னில் எந்த மாற்றமும் இல்லை... ஆனால் அன்றிலிருந்து உன்னை ரசித்திருகிறேன் என்பதே இன்று தான் புரிகிறது ஏனெனில் இன்று நீ என்னுள் விதைத்த காதல் மலர்ந்து உன் கைகளில் அழகாய் மணம் வீசிக்கொண்டிருக்கிறது... நான் உன்னை காதலிக்கிறேன்... பிடித்திருகிறது உன்னை மட்டுமல்ல... உன் அழகியமனம் கூட... நான் உன்னை காதலிக்கிறேன் என் மனம் போல் வாழ்க்கை அமையுமென்று பலரும் கூறியதுண்டு... அதில் தான் எத்தனை உண்மை இன்று மட்டுமல்ல என்றென்றும் உன்னை என் மனம் சுமந்திட வேண்டுமே.... சம்மதம் கொடுத்திடுவாயா? i love you

4/24/2009

பிரிகின்றேன்....

எங்கிருந்தோ வந்தேன்....

என்னை உன்
நண்பியாக்கிக் கொண்டாய்
பாசத்தை காட்டி .....
நாம் பிரியும் நாட்களே நட்பு தான்

எங்கிருந்தோ வந்த என்னுடன்
இன்பமாய் பழகினாய்...ஆனால் இன்று
நான் மட்டும்...
துன்பமாய் பிரிகின்றேன்....

4/10/2009

என்னுள் நீ உன்னுள் நான்

என்னை நீ கேட்காமலே
என்னுள் நீ புகுந்துவிட்டாய்.....


என்னை நீ கேட்காமலே

என் நிழலாய் தொடர்கின்றாய்.......

என்னை நீ கேட்காமலே
என் உயிரோடு உறவாடுகின்றாய்.......

என்னை நீ கேட்காமலே
என்னோடு நீ வாழ்கின்றாய்.............

என் அனுமதியின்றி நீ செய்தவைகளில் எனக்கும் இணக்கமே......

ஆனால் என் அனுமதி இன்றி வந்தது போல் என்னனுமதி இன்றி சென்று விடாதே வாலிபனே..........

ஏனெனில் உன்னை பிரிந்து வாழ என்மனம் இனங்காது....

4/08/2009

மறந்துவிடாதே

எங்கிருந்தோ வந்து..
எதிர்பாரமல் மோதி..
இதயங்கள் சேர்த்தோம்........

தூங்காத இரவோடு..
ஏங்கித்தவிக்கிறேன்..
நமக்கிடையில் ஏனிந்த தூரம்.........

பூக்கின்ற பூக்கள் எல்லாம்..
பூஜைக்கு வருவதில்லை..
மலர்கின்ற மலர்களெல்லாம்..
மாலையாக சிறப்பதுமில்லை........

உன் வாழ்வில் நானில்லை....
ஆனால் என் வாழ்வில் நீ...
என்றென்றும் இருந்திடுவாய்.....

உன் நினவுகளால் தினமும்..
உடலாலும் உள்ளத்தாலும்...
வாடும் இந்த உயிருள்ள...
காதலியை மறந்துவிடாதே...

4/07/2009

ஏங்கிடும் இவள்.......

உன்னை..

கண் சிமிட்டாமல்
பார்க்க வேண்டுமென...
ஆசைப்பட்டேன்...!

ஆனால் இப்பொழுது
கண் சிமிட்டும் நேரமாவது
பார்க்க மாட்டோமா...????????
என ஏங்குகின்றேன்...!

4/01/2009

முதல் சந்திப்பு.........





அந்தி மாலை FM வந்தேன்.,

அந்த வேளை உன்னை கண்டேன்..,

அன்று எனக்குள் கூறிக்கொண்டேன்..,
என்றென்றும் வந்திடுவேன் - உனைக் காண்

பொன் பூக்கள் கொண்டு....!!!
BY NISHA




3/29/2009

என் செவிகள்....





















ஓடோடி வந்தேன்
உன் குரல் கேட்டு......
ஆனால்.......
உன் கனவுகளில் மட்டும் வாழ்வதற்காகவே...,
எனை அழைத்திருக்கிறாய்.....
என்பது தெரிந்திருந்தால்........................
அன்றே சொல்லியிருப்பேன்...
என் செவிகளுக்கு..,
செவிடாய் இருந்திடு என...!

ஏமாற்றியது நீயல்ல....என் செவிகள் தான்