*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/16/2007

தண்டனை



செற்றவனுக்கு இறைவனால் தண்டனை
கற்றவனுக்கு தொழிலில் தண்டனை
பெற்றவனுக்கு பிள்ளையால் தண்டனை
காதலுற்றவனுக்கு காதலில் தண்டனை

நான் உன்னை மறந்தேனும் மறவேனடா

கடல் அலையை மறந்தாலும்.......

குயில் கூவ மறந்தாலும்.......
பறவை பறக்க மறந்தாலும்........
சூரியன் உதிக்க மறந்தாலும்.......
.நீ என்னை மறந்தாலும்.......
நான் உன்னை மறந்தேனும் மறவேனடா....

கனவாய்க் கலைந்தாலும் நினைவாய் உன்னோடு நான்


கண்களில் கண்ணீர் துளிகள்
நீ தொட்ட என் கன்னங்களின்
வண்ணம் கலைக்கின்றன.......


உன் நினைவுகள் என் நிலமை
கண்டு வலியால் துடி
துடித்துக்கொண்டிருக்கின்றன.

உன் நினைவுகளால் கூட
நான் படும் வேதனையை
தாங்கிக்கொள்ள்முடியைவில்லையே
உன்னால் எப்படியடா முடிந்தது?
உன் நினைவுகள் என்றுமே
வண்ண்ம் மாறுவதில்லை
உன் அன்பின் நிறம் மட்டும் மாறியதேனோ?
உன் கனவுகளில் எனை
வைத்ததாலோ என்னவோ
நான் கலைந்து விட்டேன்.........
ஆனால் என் உயிரில் உனை
வைத்ததாலேயோ நீ இன்னும்
எனை விட்டு விலகாமல்
உயிரற்ற நம் காதலுக்காக
உயிருள்ள எனை வதைக்கின்றாய்?
உன் உயிர் கூட உனதல்ல
என்றொரு நாள் நீ கூறியதன்
அர்த்தம் இதுவா?
என் உயிருள்ள வரை
என் உண்மைக் காதல்
உனக்கே சொந்தமடா.........

விதியை வென்ற காதலின் நினைவுகள்


உன்னை என்னிடம் சேர்த்ததும் விதி
நம் இருவரையும் உயிரொடு
கலந்து விடச் செய்ததும் விதி
இன்று நம் இருவரையும்
பிரித்துவிட்டுச் சென்றதுவும் விதியே

யார் மேல் யார் அன்பு செய்தால் என்ன
கடைசியில் அன்பு ஜெயிப்பது சில வேளையே
பல வேளைகளில் அன்பை வென்றிடும் விதி......
அதற்கும் காதல் வந்தால் புரியும்
பிரிவின் வேதனை...............என்ற போதிலும்
ஒரே ஒரு சந்தொஷம் கூட உண்டு...
பிரிந்த நம் காதலிலும்
என்ன தான் விதி ஜெயித்தாலும்
நம் மனதினில் நாம் கொண்ட
அன்பையும் அது விதைத்த நினைவுகளையும்
அதனால் அழிக்க முடியவில்லையே....???
ஆனால் அந்த நினைவுகள்

விதியை அழிப்பதற்கு பதிலாக
நம்மை நாள்தோறும் வதைக்கின்றது.....

என் உயிரோடு கலந்துவிட்ட என் அன்புத் தோழன்



அன்றொரு நாள் வசந்தமாய்
வாசம் வீசினாய் என்னுள்ளே

இன்று என் நினைவுகளில் மட்டும்
வாசம் வீசும் சருகாய் வாழ்கின்றாய்

இனி என்றுமே வாசம் வீச
முடியாத மலராய் வாழ்கின்றேன்
உன் நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு

12/11/2007

நீ காதலிப்பது என்னையா என் கவிகளையா



எனக்கு தெரியும்
நீ காதலிப்பது என்னையல்ல
என் கவிதைகளைத்தான் என்று


ஆனால் உனக்கு தெரியும்
உன்னை காதலிப்பது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று

என் மெளனம் தாங்கிடுமா உன் இதயம்


நான் நானாக இருக்கும் வேளை

நீ எவ்வழியாய் புகுந்தாய்

என் இதயத்தில்?

செத்து போனேனடா

உன் வசீகர புன்னகையால்



உனக்காக நான் காத்திருக்கவில்லை

உனக்காகவே பூத்திருக்கேனோ

என்றொரு கேள்வி

என் மனச் சாலையில்


தினம் தினம் உன் பெயரை

உச்சரித்து பார்க்கிறேன் ஏன் தெரியுமா?

என் கடைசி நிமிடத்திலும் கூட

என்னுடன் என்னுள் நீயாக வேண்டும்


சொல்லிவிட்டாய் உன் காதலை

பதில் சொல்லும் என் மனம் பூக்கும்

மெளனத்தை தாங்கிடுமா உன் இதயம்?

12/06/2007

நினைவெல்லாம் நீயே


கனவுகளில் உனை அழத்து
என் நினைவுகளை
சொல்ல முடியவில்லை
ஏனெனில் நினைவெல்லாம்
உனைப் பற்றிய கனவுகளே

குற்றம்


விழிகள் செய்த
குற்றம் உன்னை பார்த்தது


இதயம் செய்த குற்றம்
உன்னை நேசித்தது


இருவர் செய்த குற்றம்
பிரிந்து வாழ்வது

முந்திசெல்


அழகில் நீ என்னை முந்திசெல்..

அறிவில் நீ என்னை முந்திசெல்..

பண்பில் நீ என்னை முந்திசெல்..

உறவில் நீ என்னை முந்திசெல்...

அன்பில் நீ என்னை முந்திசெல்..

அந்தஷ்தில் நீ என்னை முந்திசெல்..

ஆனால் மரணத்தில் மட்டும்

நான் உன்னை முந்திசெல்கின்றேன்.!!!

நீ என்னோடு இல்லாததால்




விண்ணில் உலாவரும்

நிலா கூட

என்னை பார்ப்பதில்லை

நீ என்னோடு இல்லாததால்

ஏன் மறுப்பு


சோகம் போக்க
சந்தோஷம் தந்தாய்

இருள் போக்க
ஒளியை தந்தாய்

கவிதை வரைய
கற்பனையை தந்தாய்

கற்பனையை தந்து
காதலையும் தந்தாய்

காதலை தந்து ஏன்
கண் காண் மறுக்கிறாய்

நீ இன்றி நானில்லை




என் இதயத்தில் நீ இல்லை என்கிறேன்
உன் இதயமே நான் தானடி என்கிறாய்
என் பார்வையில் நீ இல்லை என்கிறேன்
உன் கண்ணின் மணியே நான் தான்டி என்கிறாய்

என் மனசுக்குள் நீ இல்லைய் என்கிறேன்
உன் மனசாட்சியே நான் தானடி என்கிறாய்

உன் வார்த்தைகள் பொய் என்கிறேன்
அதிலுள்ள எழுத்துக்களே நான் தானடி என்கிறாய்

மாலையிட வருவாய என்கிறேன்
உன் கழுத்தே நான் தானடி என்கிறாய்

என் சுவாசத்திற்கு உயிர் கொடு என்கிறேன்
உன் சுவாசமே நான் தானடி என்கிறாய்

கடைசி வரை கூட இருப்பாயா என்கிறேன்
உன் உயிரே நான் தான்டி என்கிறாய்

உள்ளம் திறந்து கேட்கிறேன் உதறி விடாதே என்கிறேன்
உரிமையுடன் சொல்கிறேன் நீ இன்றி நானில்லை என்கிறாய்

12/05/2007

குட்டி குட்டி கவிதைகள்





மழை
விண்ணுக்கும் மண்ணுக்கும்
காதலா?
புறப்பட்டு விட்டார்கள்
தூதுவர்கள் துளித் துளியாய்


முதியோர் இல்லம்
நிம்மதி ஊசி நூல்
தேடும் கந்தல் ஆடைகளின்
கனத்த கோட்டை

சமாதானம்
சாகாவரம் பெற தினம்
தினம் செத்துப் பிழைக்கும்
பீனிக்ஸ் பறவை.......


மேகங்கள்
நீலப்பட்டாடைக்கு
நூல் தேவையோ....
இதோ பஞ்சு மூட்டைகளின்
நெஞ்சை அள்ளும் பவனி....


புன்னகை
விற்க இயலாத
விலைமதிப்பில்லாத விதை
வினியோகம் செய்வதற்கு
இங்கு பலருக்கு பஞ்சம்..

சொந்தங்கள்

விண்ணுக்கு விண்மீன்கள் சொந்தம்........

மண்ணுக்கு மனிதன் சொந்தம்...........
கண்ணுக்கு கண்ணீர் சொந்தம்........
உடலுக்கு உயிர் சொந்தம்....
என் உண்மைக் காதலுக்கு நீதான் சொந்தம்

நீங்காத நினைவுகள்

நீ என்னை சாதரணமாகத்தான்

பார்த்துச் சென்றாய்
ஆனால் அந்த பார்வையில்
என் இதயம் இங்கு
ரணமாக்கிப் போனாய்
நீ அறிய நியாயமில்லை.....


உன் பிரிவில் என்
இதயம் ரணமகிப்
போன போது ஆறுதல்
சொன்னது உன்
நினைவுகள் தான்

பிரிவின் வேதனை
தெரிந்திருந்த போதும்
உன்னை பிரிந்த போது தான்
அதை உணர்ந்துக் கொண்டேன்

நீ எனைப் பிரிந்து போன
இடைவெளியை என் கண்ணீர்
தான் நிரப்பிக் கொன்டிருக்கிறது
அன்று நீ கண்களால்
பேசிய பாசையின் அர்த்தம்
எனக்கு புரியவில்லை...

ஆனால் இன்று அதன் அர்த்தம்
தெரிந்தும் கூட என்ன பயன்
நீ என் அருகில் இல்லையே...

நீ தூரதேசம் சென்றாலும்
திரும்பிவரும் போது
என் இதயததேசத்தில்
நிச்சயம் உனக்கக ஓர்
இடம் காத்திருக்கும்..

12/04/2007

காத்திருக்கும் இவள்

கண் இமைக்கும் நேரத்தில்

கண்ணெதிரே தோன்றினாய்
கண்விழி புகுந்து
கற்பனையையும் தந்தாய்

உன்னை விட்டுப்
பிரியும் போதெல்லாம்
என் மனம்
ரணமய் மாறிடும்
ஆனாலும் என்னை
விட்டு பிரிந்து நீ
சென்ற பின்பும்
உன் வாசம் என்னை
விட்டு பிரிவதில்லை..!

இப்பொழுது புரிகிறதா?
நீ என் உயிரில் மட்டுமல்ல
என் சுவாசத்திலும்
உரைந்துவிட்டாய் என்று..!

எதற்காக உன்னை
காதலித்தேன் என்பது
எனக்கு புரியவில்லை!
ஆனால் எதற்காகவும்
உன்னை இழக்கமாட்டேன்
என்பது மட்டும் புரிகிறது...........

உன்னை சேர்ந்திட
மனம் ஏங்குதே...
என் அன்பே உனக்கு
என் வலி புரிகிறதா?
உன்னை சேரும்
நாளை எண்ணிப்பார்பதிலும்
ஓர் சுகம் கண்டேன்....
உன்னக்காகவே வாழ்ந்திட
நினைக்கும் போதே

இவ்வளவு சுகம் என்றால் ....
உன்னோடு வாழ்ந்திடும்
நாளை எண்ணி எண்ணித்
தவமாய் தவமிருக்கிறேன்.......!!!

காதல்


காதல் என்பது

புனிதமானது

காதலிப்பதென்பது

அதை விட

இன்பமானது

காதலை காப்பது

காலத்தை போன்றது

காலத்தை போல்

சென்று விட்டால்

அதை விட துன்பமான

மரணமே மேல்

நான் உனக்காகவே ஆனால் நீ எனக்காகவா?


ஓர் அகதியாய் வாழ்ந்தேன்
உன்னோடு வாழலாம் என்று

உன்கூடவே இருந்தேன்
நீ சுவாசிக்கும் காற்றையே

சுவாசிக்கலாம் என்று
உன் திசையிலேயே நடந்தேன்

உன் நிழலாய் மாறினேன்
உன்னை விட்டு பிரியாமல்
உன் நிழலாய் வாழ்வேன்
என்று உனக்கு உணர்த்தவே

நான் உனக்காகவே
ஆனால் நீ எனக்காகவா?

நான் ,நீ........


மழைத்துளி விழுந்து
பூமி நனைந்தாலும்
பூமி நனைவது
மழைக்கு மட்டுமா?

இரா வானில்
நட்சத்திரங்கள் இருந்தாலும்
நட்சத்திரங்கள் இருப்பது
இரவில் மட்டுமா?

கருங்குயில்கள்
பாட்டிசைத்தாலும்
பாட்டிசைப்பது
குயில்கள் மட்டுமா?

எனக்கு இருப்பது
நீ மட்டும் தான்
என்றாலும் உனக்கு
இருப்பது நான் மட்டுமா?

என் காதலன்

கண்டவுடன் காதல்

வருவது உண்மை...
ஆனால் கன்டவருடன்
காதல் வருவது மடமை....
இவனுக்கு இதில்
என்ன புதுமை..
அதனால் தான்
மறந்தான் என்னை..

மறந்து விடாதே....

கடந்தகால கனவுகளை

கண்ணீரில் கழுவிப்பார்கிறேன்......
அறிமுகத்தில் பிறந்து
அன்பில் உதித்து,
காதலில் ஆரம்பித்தோம்.!!!
நழுவிப்போன நினைவுகளை
அழைக்கிறேன்.......
.
எங்கிருந்தோ வந்து
எதிர்பாராது மோதி
இதயங்கள் சேர்த்தோம்
தூங்காத இரவோடு
ங்கித்தவிக்கிறேன்.
நமக்கிடையில் ஏனிந்த தூரம்
என்று இதயம் எரிகின்றது....
பூக்கின்ற பூக்கள் எல்லாம்
பூஜைக்கு வருவதில்லை.
மலர்கின்ற மலர்கள் எல்லாம்
மாலையாய் சிறப்பதில்லை.
ஆனால் காதலன் உனக்காக
என் மனதில் பூ ஒன்று பூத்திருக்கும்.
இந்த காதலியின் இதயம்
உனக்கக கல்லறை வரை
காத்திருக்கும்!!!

உன் நினைவுகளால் தினம் தினம்
உள்ளத்தாலும் உடலாலும்
வாடும் இந்த உயிருள்ள
உன் காதலியை மறந்து விடாதே........!!

என்னை நேசிக்கும் உன்னை என்றென்றும் நேசிப்பேன்

உன் தோள்களில்

சாய்ந்திடும் போது
என் காதலனாக உனைப்
பார்க்கிறேன்
உன் மடியினில்
சய்ந்திடும் போது
என் அன்னையை நான்
உணர்கிறேன்

உன் நெஞ்சில்
சய்ந்திடும் போது
என் கணவனை
காண்கின்றேன்

உன் ஆறுதலை
செவிசாய்த்திடும் போது
என் தந்தையை நான்
உணர்கின்றேன்

என்னை நீ நேசித்திடும்
போது உன் குழந்தையாகவே
மாறிடுகின்றேன்
(உன் குழந்தையை காண்கின்றேன்)

என்னுள் நீ உன்னுள் நான்

என்னை நீ கேட்காமலே

என்னுள் நீ புகுந்துவிட்டாய்.....

என்னை நீ கேட்காமலே
என் நிழலாய் தொடர்கின்றாய்.......
என்னை நீ கேட்காமலே
என் உயிரோடு உறவாடுகின்றாய்.......

என்னை நீ கேட்காமலே
என்னோடு நீ வாழ்கின்றாய்.............

என் அனுமதியின்றி நீ
செய்தவைகளில் எனக்கும் இணக்கமே......
ஆனால் என் அனுமதி
இன்றி வந்தது போல்
என்னனுமதி இன்றி
சென்று விடாதே வாலிபனே..........

ஏனெனில் உன்னை
பிரிந்து வாழ என்மனம் இனங்காது....

உன் உயிர் நான் தானே


மலராக நீ இருந்தால்
மணமாக நான் இருப்பேன்..


நிலவாக நீ இருந்தால்
ஒளியாக நான் இருப்பேன்........


கடலாக நீ இருந்தல்
அலையாக நான் இருப்பேன்.....


காற்றாக நீ இருந்தால்
கொடியாக நான் இருப்பேன்..

.

நீ தான் என் வாழ்வென்றால்
நான் தான் உன் உயிரென்பேன்

மெளனம் தாங்காது என் இதயம்


அடித்த கைகள் அணைத்திடும்

பொழுதினில் இனித்திடும்

எண்ணங்கள்

அணைத்த கைகள் அடித்திடும்

வேளையில் சோர்ந்திடும்

சோகம் என்னவோ?

பேசிடும் நேரம் பேச

மறுத்த இதழ்கள் நீ

மெளனித்திடும் போது

பேச ஏங்கிடும் மனம் ஏனோ..

உன் கோபத்தை

கூட ரசிக்கத் தெரிந்த எனக்கு

உன் மெளனமதை

தாங்கிக்கொள்ள

வழி சொல்லிடு என் காதலே..........

ஏன் என்னை வெறுக்கின்றாய்

புரியவில்லை.

சொல்லிவிடு காரணத்தை

மெளனம் தாங்காது என் இதயம்

12/03/2007

நில் நில்வே என்னவனை கேட்டுச்சொல்


கனவாக நீ வந்திடும்
வேளை நான் இரவின்
மடியில் உறங்கிடுவேன்


உறவாக நீ
வருவாயென்றால்
உன் உயிரில்
நான் உறைந்திடுவேன்


நண்பனாக நீ வந்த
நொடியில் நானுன்னிள்
மறைந்துவிட்டேன்
கணவனாக நீ
வருவாயென்றால்
கண்ணயராமல் காத்திருப்பேன்

வேறொருவனுடன்
தான் வாழ்வென்றால்
தயங்காமல் சென்றிடுவேன்
உவ்வுலகை விட்டு..........

என் அன்பே கணவனாக
வந்திடுவாயா?
காணல் நீராய்
மறைந்திடுவாயா?.........
நில் நில்வே
என்னவனை கேட்டுச்சொல்...........

நீ உணரவில்லையா?.........


சூரியனின் வதனத்தில்

உன் கண்கள்

இருப்பதனாலேயோ

அது என்னை எரிக்கிறது



வீசும் காற்றில்

உன் சுவாசம்

கலந்ததாலேயோ

அது என்னை

சுடுகின்றது


என் உயிரில் உன்

உயிர் கலந்திருப்பதாலேயோ

என் உயிர் உருகுகிறது


என் இதயத்தில் உன் காதல்

பூத்திருப்பதாலேயோ

என் இதயம்

வாடிக்கிடக்கிறது


அன்பே உன் ஒவ்வொரு

செய்கையும் என்னை

பாதிக்கும் போதுதினமும்

நான் அர்த்த ராத்திரியில்

விடும் அர்த்தமுள்ள

இரத்தக் கண்ணீர்

உன்னை ஒன்றும்

செய்யவில்லையா?

நெஞ்சம் நிறைய அம்மா


ஆயிரம் சொல்லுண்டு

அகிலத்தில்ஆனாலும்

ஒன்றுண்டு நெஞ்சத்தில்

அன்பிற்கும்ண்டு பலவகை

அம்மாவின் வகையொன்றேதான்

அணைப்புகள் கொடுத்திடும்

சுகங்கள்அன்னையின்

அணைப்பிற்குமுண்டோ ஈடு

அன்றவள் இருக்கையில்

இல்லை அறிவு ஏழை என்வசம்

ஆண்டவன் அழைத்திட்ட

பின்னாலே அழுகுது இதயம்

வெறுமையாகவே

அன்னையர் தினம் வரும்

வேளையிலேஅனுபவம்

தன்னிலே ஒரு சொல் கேளீர்

அருமையாய் பேணி

அம்மாவைக் காத்திடும்

ஆவியாய் அவள் மறைந்த

பின்னாலே அழுது புரளுவதும்

ஆயிரம் பேசுதலும்

அமைதியைத் தராது

அடித்தே சொல்லுவேன்

சிந்திக்க வைப்பவை........


இதயத்துக்குள் ஆயிரம்
மின்னல்களாய்
ஜொலித்துக்கொண்டிருக்கும்
நினைவெனும் நட்சத்திரங்கள்......
கனவாகிப் போய்விடாமல்
என்றென்றும் கண் முன் தோன்றி
நிழலாடும் உறவெனும்
தொடர்கதைகள்.......
வாழ்வை அர்த்தப்படுத்தவென
இறைவன் எமக்கு தந்த
பரிசுகளாய் நட்பெனும்
வண்ணமலர்கள் இவை யாவும்
எம்மை சிந்திக்க
வைக்கும் சிறுகதைகள்........

நிழலல்ல நிஜம்


கண்களை மூடினேன்

கனவினில் நீ வந்தாய்

நிஜத்தினில் தேடினேன்

நிழலாய் நீ வந்தாய்

நட்பெனும் பாலத்தில்

இணைந்த நாம்

இப்போது பிரிவெனும்

நிலையத்தில் நின்று

துயர் எனும் Bus ல் பயணிக்கின்றோம்.........

புரிந்து கொண்டேன் -

நம் காதல் திருமணத்தில்

தான் முடியுமென்று
நீ கூறியதன் அர்த்தத்தை,
என் தோழியின் திருமண வீட்டில்
உன்னை மாப்பிள்ளையாய்
கண்ட போதே புரிந்து கொண்டேன்.....

உயிர் மூச்சு



நான் இல்லாவிட்டால்

உன்னில் இயக்கமே இல்லை.....

என்னுருவம் என்னவென்று

உனக்கு தெரியுமா?

உன்னில் நான்

குடிகொள்ள்வில்லை...

என்னில் தானே நீ

குடிகொண்டு வாழ்கின்றாய்..

நான் உன்னை விட்டு

பிரிந்து சென்று விட்டால்

உன் ஆட்டம் அடங்கிவிடும்.........

ஓய்வு


இரவின் ஓய்வு பகல்
பகலின் ஓய்வு இரவு
நிலவின் ஓய்வு அமாவாசை
இளமையின் ஓய்வு காதல்
காதலின் ஓய்வு திருமணம்
திருமணத்தின் ஓய்வு முதிமை
முதுமையின் ஓய்வு மரணம்