*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

7/15/2009

சம்மதம் கொடுத்திடுவாயா?


எங்கிருந்தாய் நீ இத்தனை காலமும்.. இத்தனை காலமும் உனக்காக தான் காத்திருந்தேனா? புரியவில்லையே... அன்று நீ காதைலை சொல்லிய பொழுதினில் ,, என்னில் எந்த மாற்றமும் இல்லை... ஆனால் அன்றிலிருந்து உன்னை ரசித்திருகிறேன் என்பதே இன்று தான் புரிகிறது ஏனெனில் இன்று நீ என்னுள் விதைத்த காதல் மலர்ந்து உன் கைகளில் அழகாய் மணம் வீசிக்கொண்டிருக்கிறது... நான் உன்னை காதலிக்கிறேன்... பிடித்திருகிறது உன்னை மட்டுமல்ல... உன் அழகியமனம் கூட... நான் உன்னை காதலிக்கிறேன் என் மனம் போல் வாழ்க்கை அமையுமென்று பலரும் கூறியதுண்டு... அதில் தான் எத்தனை உண்மை இன்று மட்டுமல்ல என்றென்றும் உன்னை என் மனம் சுமந்திட வேண்டுமே.... சம்மதம் கொடுத்திடுவாயா? i love you

4/24/2009

பிரிகின்றேன்....

எங்கிருந்தோ வந்தேன்....

என்னை உன்
நண்பியாக்கிக் கொண்டாய்
பாசத்தை காட்டி .....
நாம் பிரியும் நாட்களே நட்பு தான்

எங்கிருந்தோ வந்த என்னுடன்
இன்பமாய் பழகினாய்...ஆனால் இன்று
நான் மட்டும்...
துன்பமாய் பிரிகின்றேன்....

4/10/2009

என்னுள் நீ உன்னுள் நான்

என்னை நீ கேட்காமலே
என்னுள் நீ புகுந்துவிட்டாய்.....


என்னை நீ கேட்காமலே

என் நிழலாய் தொடர்கின்றாய்.......

என்னை நீ கேட்காமலே
என் உயிரோடு உறவாடுகின்றாய்.......

என்னை நீ கேட்காமலே
என்னோடு நீ வாழ்கின்றாய்.............

என் அனுமதியின்றி நீ செய்தவைகளில் எனக்கும் இணக்கமே......

ஆனால் என் அனுமதி இன்றி வந்தது போல் என்னனுமதி இன்றி சென்று விடாதே வாலிபனே..........

ஏனெனில் உன்னை பிரிந்து வாழ என்மனம் இனங்காது....

4/08/2009

மறந்துவிடாதே

எங்கிருந்தோ வந்து..
எதிர்பாரமல் மோதி..
இதயங்கள் சேர்த்தோம்........

தூங்காத இரவோடு..
ஏங்கித்தவிக்கிறேன்..
நமக்கிடையில் ஏனிந்த தூரம்.........

பூக்கின்ற பூக்கள் எல்லாம்..
பூஜைக்கு வருவதில்லை..
மலர்கின்ற மலர்களெல்லாம்..
மாலையாக சிறப்பதுமில்லை........

உன் வாழ்வில் நானில்லை....
ஆனால் என் வாழ்வில் நீ...
என்றென்றும் இருந்திடுவாய்.....

உன் நினவுகளால் தினமும்..
உடலாலும் உள்ளத்தாலும்...
வாடும் இந்த உயிருள்ள...
காதலியை மறந்துவிடாதே...

4/07/2009

ஏங்கிடும் இவள்.......

உன்னை..

கண் சிமிட்டாமல்
பார்க்க வேண்டுமென...
ஆசைப்பட்டேன்...!

ஆனால் இப்பொழுது
கண் சிமிட்டும் நேரமாவது
பார்க்க மாட்டோமா...????????
என ஏங்குகின்றேன்...!

4/01/2009

முதல் சந்திப்பு.........





அந்தி மாலை FM வந்தேன்.,

அந்த வேளை உன்னை கண்டேன்..,

அன்று எனக்குள் கூறிக்கொண்டேன்..,
என்றென்றும் வந்திடுவேன் - உனைக் காண்

பொன் பூக்கள் கொண்டு....!!!
BY NISHA




3/29/2009

என் செவிகள்....





















ஓடோடி வந்தேன்
உன் குரல் கேட்டு......
ஆனால்.......
உன் கனவுகளில் மட்டும் வாழ்வதற்காகவே...,
எனை அழைத்திருக்கிறாய்.....
என்பது தெரிந்திருந்தால்........................
அன்றே சொல்லியிருப்பேன்...
என் செவிகளுக்கு..,
செவிடாய் இருந்திடு என...!

ஏமாற்றியது நீயல்ல....என் செவிகள் தான்

உன் மாற்றம்.................




உனக்காக நான்

வாழ நினைத்த போதெல்லாம்.......உதறிவிட்டாய்

என்னை மட்டுமல்ல என் காதலையும் தான்...!


ஆனால்..........

என்னுள் இருக்கும் உன் உள்ளம் உரைக்கிறது


" உன்னோடு வாழ என்னக்கும் ஆசை தான்'


உன் உள்ளம் மட்டுமல்ல

உன் விழிகளும் சொல்கிறது...

என்ற போதிலும் எனை உதறிவிட்ட நீயே

மீண்டும் அழைக்கிறாய்...

உன் அருகினில் வாழ்ந்திட.......


என் மனம் ஏற்றிடுமா உன் மாற்றத்தை

3/24/2009

உனக்காக.......









































உதட்டளவில் நீ மறைத்தாலும்

உள்ளுக்குள் நான் தான் என்பது எனக்கு தெரியும்
உண்மையான காதலில் வார்த்தைகள் தேவையில்லை
மெளனமாய் நீ பெசிடும் ஒற்றை வார்த்தை கூட அமிர்தம் எனக்கு

ஏனிந்த வீண் முயற்சி
நீ என்ன தான் மறத்தாலும் நம் உறவுக்கு என்ன பெயர் வைத்தாலும்
நான் மட்டுமல்ல நீயும் காதலிக்கின்றாய்



என்றாவது ஒரு நிமிடம்..... உன் மனதில் என் உருவை நிறுத்திப்பார் அன்றும் என் நினவுகள் உன்னை தாலாட்டும்

அன்றாவது சொல்லிடு உன் காதலை...
என் நினைவுகளாவது
நிம்மதியாய் உறங்கட்டும் உன்னுள்...




பிடிச்சிருக்கு..........



உன்னிடம் என்னிடம் என்ன உனக்கு பிடிக்கும் என் அடிக்கடி கேட்கின்றாயே... பிடிக்காது என்று சொல்ல ஒன்றுமே இல்லை உன்னிடம் தீப்பொறி பொன்ற உன் கண்கள் தேனாய் இனிக்கின்ற உன் பேச்சு எனை தீண்டிடும் உன் கைகள் என் திசையில் நடந்திடும் உன் கால்கள் என்னை மட்டும் நேசிக்கின்ற உன் உள்ளம் அத்தனையும் பிடிக்கும் ஆனால் இதில் எதுவுமே எனதில்லை....யே என்றபோதும் உன்னிடம் நான் கேட்பதெல்லாம் என்னை உன் நெஞ்சின் ஓரத்திலாவது சேமித்து வைப்பாயா

நீ மட்டும் தான் ....!!



ஆயிரம் ஆண்கள் மத்தியில் நீ இருந்தாலும்
உன்னை என் கண்கள் கண்டு கொள்ளும்
எப்படி தெரியுமா..........?
அவர்களில் என்னை திரும்பி பார்க்காமல் செல்வதே 
நீ மட்டும் தான்...........!!!!

நீ.......

நீ ஆயிரம் கோடி ஆண்கள் மத்தியில் இருந்தாலும்

என் கண்கள் உனை கண்டுகொள்ளும்

எப்படி தெரியுமா....

அவர்களில் என்னை திரும்பி பார்க்காமல் செல்வதே

நீ மட்டும் தான்........

ShOrT & SweeT...

என் மனமே ஒரு கல்

அதை உருக்கியது உன் சொல்

புரிந்து கொள்வாய்....

என்னை மறக்க முயற்சி செய்....!

ஏனெனில் அப்பொழுதாவது ....

நான் உன் நினவுகளில் மட்டுமல்ல

உன் உயிரிலும் கலந்திருப்பதை

புரிந்து கொள்வாய்........!!!

3/17/2009

எப்படி ஒதுங்குவேன்.......



நான் மழைக்கு கூட
ஒதுங்கியதில்லை....

உன் மனதை விட்டு
எப்படி ஒதுங்குவேன்

3/10/2009

என் நினைவெல்லாம் நீயே....

ன் கனவுகளில்

உனை அழைத்து
என் நினைவுகளை
சொல்ல முடியவில்லை
ஏனெனில்....
என் நினைவெல்லாம்
உன்னை பற்றிய கனவுகளே

என் கனவுகளில் மட்டும்
நீ விழித்திருந்திருந்தால்
அவை என்றோ உறங்கியிருக்கும்

ஆனால்... உன் நினவுகளோ
என்னில் உயிர்த்திருக்கின்றன
அவை என் உயிருள்ள வரை
என்னுடன் உறவாடிக்கொண்டே இருக்கும் ....

3/06/2009

அன்பே


பறிக்க மனமில்லை
அழகாய் பூத்தது
விதைத்தது நீ
வளர்க்க நினைத்ததுண்டு
வாடிவிடும் என்று தெரியாமல்
நீ வந்த நொடியிலும் பார்க்க வேகத்துடன்
வானவெளி ஓடிவிட்டாய்
நினைக்கவே இல்லை
உன்னை நான் பிரிவேன் என
வாழ்த்துகின்றேன்.............
மலராய் பூத்த உன் அன்பு
என்றென்றும் மங்காது ஜொலித்திடவே





3/05/2009

MiSs YoU

you're on my mind,

ever since you've been gone
i keep thinking of you
from dusk to dawn
can't wait for the day
that you'll be back with mecause without you

everything is as meaningless as can be
i miss youu so much

நிழலல்ல நிஜம்

கண்களை மூடினேன்

கனவினில் நீ வந்தாய்

நிஜத்தினில் தேடினேன்
நிழலாய் நீ வந்தாய்

நட்பெனும் பாலத்தில்
இணைந்த நாம்
இப்போது பிரிவெனும்
நிலையத்தில் நின்று
துயர் எனும் Bus ல்
பயணிக்கின்றோம்.........

நான் ,நீ

மழைத்துளி விழுந்து பூமி நனைந்தாலும்

பூமி நனைவது மழைக்கு மட்டுமா?

இரா வானில் நட்சத்திரங்கள் இருந்தாலும்
நட்சத்திரங்கள் இருப்பது இரவில் மட்டுமா?

கருங்குயில்கள் பாட்டிசைத்தாலும்
பாட்டிசைப்பது குயில்கள் மட்டுமா?

எனக்கு இருப்பது நீ மட்டும் தான் என்றாலும்
உனக்கு இருப்பது நான் மட்டுமா?



என் காதலன் (படித்து சுவைத்த கவிதை)

கண்டவுடன் காதல்
வருவது உண்மை...

ஆனால் கன்டவருடன்
காதல் வருவது மடமை....

இவனுக்கு இதில்
என்ன புதுமை..

அதனால் தான்
மறந்தான் என்னை..

சொந்தங்கள்

விண்ணுக்கு விண்மீன்கள் சொந்தம்........

மண்ணுக்கு மனிதன் சொந்தம்...........
கண்ணுக்கு கண்ணீர் சொந்தம்........
உடலுக்கு உயிர் சொந்தம்....
என் உண்மைக் காதலுக்கு நீதான் சொந்தம்...



வேண்டும்..

வண்ண மலருக்கு

மணம் வேன்டும்
வண்டுக்கு
தேன் வேண்டும்

வாலிபன் உனக்கு
யார் வேண்டும்

வனிதை எனக்கு
நீதான் வேண்டும்

ஓய்வு ....

இரவின் ஓய்வு பகல்

பகலின் ஓய்வு இரவு
நிலவின் ஓய்வு அமாவாசை
இளமையின் ஓய்வு காதல்
காதலின் ஓய்வு திருமணம்
திருமணத்தின் ஓய்வு முதிமை
முதுமையின் ஓய்வு மரணம்

உனக்காகவே காத்திருக்கின்றேன்............


இத்தனைக் காலமும்...
நான் வாழ்க்கைப் பாதையில்...
காதலில் விழாமலே பயணித்தேன்


காரணம் அங்குள்ள போதையால்
என்னை சீராட்டி சோறூட்டி வழர்த்த
தாயையும் தாயன்பையும்
மறந்துவிடுவேன் என்பதால்,.........ஆனால்
அங்கிருப்பது போதையல்ல
அன்பு மட்டுமே என்பதை
உன்னை காதலிக்கும் போதே
உணர்ந்து கொண்டேன்


எல்லோரையுமே
நேசிக்கத் தெரிந்த எனக்கு,
உன்னை மட்டும் அதிகமாக நேசிக்கும்
வித்தையை கற்றுக்கொடுத்து விட்டாயே

எப்படியடா?
எத்தனையோ துன்பங்களும்
எண்ணங்களும்
மனதிலே நில்லாத ரயில் போல
ஓடிக்கொண்டே இருந்தாலும்
உன்னைப் பார்த்த நொடிதனில்
எங்கே ஒழிந்துகொண்டனவோ
நான் அறியேன்


எத்தனையோ மொழிகள்
அத்தைனையும் உன் கண்கள்
என்னிடம் பேசிடும் மொழிகள்
போலாகுமா?

ஓராயிரம் வார்த்தைகள்
என்னில் மொழி தெரியாமல்
சிக்கிக் கொண்டிருக்கின்றன
என்றைக்கு நீ எனக்கு
முழுவதுமாக சொந்த்மாகின்றாயோ
அன்றைக்கே அவை
கண்ணீராக வெளிவரும்.............

அந்த நாளை எண்ணிக்
காத்திருக்கின்றேன் பொருமையோடு(உனக்காகவே)

3/01/2009

நீயும் உன் நினைவுகளும்!!!























கண்முன்னே வந்ததும் நீதான்
கண்ணீரைத் தந்ததும் நீயேதான்
காதல் சொன்னதும் நீதான்
காயம் தந்ததும் நீயேதான்
நினைவுகளை தந்ததும் நீதான்
நெருப்பினை தந்ததும் நீயேதான்
அழகான நாட்கள் அதை தந்தவனும் நீதான்
அழியாத சோகம் அதையும் தந்தவனும் நீயேதான்
உன் நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்
என்னிடத்தில் எதுவும் இல்லை
உயிரே உன் நினைவுகளைத்தவிர
உன் நினைவுகளையும்
இழக்க விரும்பவில்லை உன்னைப்போல்
ஏனெனில்......
எனக்கு ஆறுதலாய் இருப்பதே
உன் நினவுகள் தான்


உன் வாழ்வில்...
சந்தோஷங்கள் மட்டுமே...
நடை போட என் வாழ்த்துக்கள்......

2/24/2009

என் குட்டிச் செல்லமே உனக்காக....

என் அழகு தேவதைதே...

உனை செல்லமாய்.....
கொஞ்சிடும் பொழுது தான்
எத்தனை இன்பம் நெஞ்சில்...
உன் விழிகள்.....
கறுப்பு வெள்ளை பூவாய்
ஆயிரம் கதை பேசுகிறது என்னிடம்

அழகிய இதழ் கொண்டு சிரிக்கிறாய்
சிரிப்பினில் தான் எத்தனை அழகு
எங்கே வாங்கினாய் இந்த புன்னகை பூவினை
எத்தனை ஜென்மமும் எடுக்கலாம்....
உன்னோடு இருக்கமுடியுமென்றால்....
பூக்களின் வண்ணங்களோடு வளரும் உன்னோடு
கலந்துவிட்டது எந்தன் உள்ளம்

இரு விழிகள் கொண்டு
காண்பவரை ஈர்த்திடும்...,
குட்டிக் குட்டி கவிதையா நீ....

2/15/2009

இறுதி முடிவு.............!!!

அன்று உன்னருகில் நானிருக்கையில்

தெரியவில்லை உனக்கு என் அருமை
ஆனால் இன்று விம்மித்தவிக்கிறாய்...!
புரியவில்லை...எனக்கு .....................!!!
என்னை உதறிவிட்ட உனக்கு
என் நினைவுகள் மட்டும் ஏன் என்று
உண்மைதான்......
உன்னருகிலேயே வாழ ஆசைப்பட்டதுண்டு
அன்று புரியவில்லை பேதை இவளுக்கு
உன் வஞ்சக மனம்.....!
என்ற போதும் நீ துடிப்பதை கண்டு
மனம் வாடுகின்றேன் .....
ஏனோ தெரியவில்லை உனை வெறுத்த எனக்கு
காதலை மட்டும் மறக்கத் தெரியவில்லை...!
அன்றொரு நாள் ஏங்கினேன்
உனை பார்க்கமாட்டோமா என....!
ஆனால் இன்று சொல்கிறேன்
என் கண்களுக்கு......
இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அவனை பார்த்திடாதே என...!

2/12/2009

!!நிஷாவின் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!

அன்றாடம் ஆயிரம் பூக்கள் பூக்கலாம்
ஆனாலும் காயாகும் சில பூக்கள் மட்டுமே
எல்லோருக்கும் காதல் வரும் என்றாலும்
கல்யாண வைபோகம் சிலபேர்க்குத்தான்


இங்கு வருகை தந்த மற்றும் வருகை தருகின்ற
அனைவருக்கும் என் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
உங்கள் அனைத்து எதிர்ப்பார்ப்புக்களும்
இனிதே நிறைவேற வேண்டுமென
எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றேன்




என்றென்றும் புன்னகையுடன்
உங்கள் !!நிஷா!!

2/11/2009

!!!நான்!!!


அழகிய விழிகொண்டு
இராவானில் உலாவரும்
நிலவுடன்கதை பேசி
நீலவான ஓடையில் நீந்திடும்
குட்டிக் குட்டி கவிதை நானே

!!!என்ன இருந்த போதும் அவன் எனதில்லையே!!!


என் தோட்டத்தில் நீந்திடும் தென்றல் அவன்
என் வீணையில் மீட்டிடும் ராகமும் அவன்
எல்லாமும் நீயாக இருக்கின்றாய்-ஆனால்
என்ன இருந்த போதும் எனதில்லையே
அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்


நட்பே உனை நேசிக்கிறேன்


என் அன்பு DEVIL க்கு
சொல்லாமலே சென்றிடும் சொந்தங்களில்
சொந்தம் சொல்லி வந்தது உன் உறவு
உன்னிடம் நான் சொல்வதெல்லாம்
ஒன்றே ஒன்று தான்
மலையளவு புகழ் வந்தாலும்
மடி நிறைய பொருள் சேர்ந்தாலும்
எத்தனை உறவுகளானாலும்
நட்பே உன்னை நேசித்திடுவேன்
என்றும் மாறாத அன்போடு

இப்படிக்கு உங்கள் ப்ரியமானதோழி