*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

11/28/2007

ஏன்


என் விழிச் சாலையினுள்
சென்று நீ குதித்தது என்
இதயக் குளத்தில் தான்
அப்படி இருந்தும்
ஏன் தளம்பி வடிகிறது
என் கண் குளம்

11/25/2007

திரும்பிப்பார்


உன்னை நினைத்து
உருக்குலைந்த
என்னுள்ளத்தை
ஒரு முறை திரும்பிப்பார்


உனக்காக அழுது
சிவந்து போன
என் விழிகளை
ஒரு முறை திரும்பிப்பார்


உன் பெயரை எழுதி
உணர்வற்று போன
என் விரல்களைத
ஒரு முறைதிரும்பிப்பார்
உனக்காக வாழ்ந்து
உனக்கக சாகத்துடிக்கும்
என் உயிரை
ஒரு முறை திரும்பிப்பார்

சொல்லிவிடு

மறந்து விடு என்றாய்
இதயத்திற்கு
நான் சொல்லிவிட்டேன்
இயற்கைக்கு
நீ சொல்வாயா???
பாழாய்ப்போன இயற்கை
படுத்துகிறதே அன்பே

கருணை மனு


சிறைக்கைதிக்காவது

மீண்டும் வர

கருணை மனு

அளிக்கின்றான்
காதலெனும்

சிறைக்குள்

எனை மட்டும்

ஆயுள் கைதியாக்கிவிட்டாய்

11/22/2007

மனசு


உன்னை நினைத்து

ஒட்ட முடியாதவாறு

உடைந்து போயிற்று

என் மனசு

சோக மேகம்

என் வானில்.....

சோக மேகங்கள்
சூழ்ந்து கொண்டதால்....
கண்ணீர் மழை பொழிந்து
கரை புரண்டு ஓடுகிறது..
என் நினைவுகளோடு சேர்ந்து
எதிர்கால கனவுகளும் கூட.......

கலப்படம்

மறக்க நினைத்தாலும்

மரணிக்காத நினைவுகள்
பசுமரத்தாணியாய்
பதிந்துவிட்டன....
வஞ்சி என் மனதை
கவி வரிகளால்
கடிவாளம் போட்டவனே
அஞ்சி ஓடினேனே-அம்பாய் விட்டாயே
கவிதைகளை
வார்த்தைகள் பாதிக்கவில்லை
வசனங்கள் தான்
வருத்திவிட்டன நெஞ்சை
ஏற்றுக்கொண்ட காதலுக்கு
ஏற்ற பரிசு தந்து விட்டாய்
எத்தனை காலம் காத்திருந்திருப்பாய்
என் ஒற்றை வார்த்தைக்காய்
ஆமாம் போட்டபின் தான்
அம்மா பெரிதாகிப்போனாவோ
அகன்று விட்டாயே
அன்பின்றி
அன்பர்களே..........
ஆண்களின் அழுகையை
ஆசை வார்த்தைகளை
அன்பொழுகும் கவிகளை
அள்ளி வழங்கும் இரத்தக் கடிதங்களை
நப்பாதீர்கள்
அனைத்தும் கலப்பங்களே

11/21/2007

காதல்

பிரியாத உறவின் பிடியில்

தொலைந்து போன என் இதயம்
கலைந்து போகும் கானல் நீராய்
ஆனபிறகு
அதனை நினைத்து ஏங்குவதற்கு
மனதில் வார்த்தைகள் தான்
மெளனமாய் உறைந்தது

சுமை .......

சிலுவை சுமந்ததுண்டா?

சுமக்க முயற்சித்ததுண்டா??
சுமக்க நினைத்ததாவது உண்டா????
சுமக்க விரும்பினால்
சுமந்து பார் காதலை
சுமையில் சிலுவையே தோற்கும்
இன்ப (துன்ப) சுமை காதல்




மறந்து விட்டேன்..........


மொழிகளையே

மறந்து விட்டேன்

அவன் பேசியதைக் கேட்டு

11/20/2007

எதிர்ப்பார்க்கும் கல்லறை!!!

என் இரு விழிகளில் நித்தமும்
காட்சியளிக்கும் - உன் பொன்
முகத்தை - இனி
எப்போதடா காண்பேன்

கடல் கடந்து நீ சென்றாலும்
என் மன அலைகளில் - உன்
நினைவுகளே
அடித்துக்கொண்டிருக்கிறது

காரணம் அன்று கனவில்
நீ வந்தாய் இன்று நினைவெல்லாம்
நீயாய் ஆனாய்!

அன்பே என் சுவாச்த் தொழிற்சாலை
இயங்கும் வரையும் - உன்
நினைவுகளையே காற்றாக
சுவாசிக்கிறேன் !!

நான் மடிந்தாலும் கூட
என் கல்லறை நித்தமும் - உனை
எண்ணி உன் வரவை
எதிர்ப்பார்க்கும்

எனது காதல்






தொலைந்துபோனவாழ்விற்குள்
இன்றும்
தொலையாமல் பத்திரமாய் எனக்குள்
உனது
நினைவுக் கோலங்கள் மட்டும்
சட்டை பையில்
ஒட்டிக்கொண்ட கறையை போல
இதயத் தாள்களில்
கிழிக்கப்படாத பக்கங்களாய்
சிதையாத கவித் துளிகளாய்
உனது ஞாபகங்கள்
சிந்திய கண்ணீருக்குள்

சிக்குண்டு உருண்டோடும்
எனது ஏக்கங்கள்
கன்னத்தில் வழிந்தோடி
காய்ந்தே போகின்றது
என் கலைந்து போன
கனவுகளைப் போல
காயங்களால் மட்டுமல்ல
கண்ணீராலும் வாழ்கின்றது
எனது காதல்
கலங்கிய விழிகளின்
சாட்ச்சிக்குள்
என் காதலின் நேசமும்
கலந்தே உள்ளது

11/14/2007

அன்பு


அழகாய் பூத்தது
பறிக்க மனமில்லை
விதைத்தது அவன்

11/07/2007

என் உண்மைக் காதலே


நீ தான் என் உயிர் என்றேன்...இது வரை காலமும்

இனி என் வாழ்வில் நீ இல்லவே இல்லை என்றேன்

இன்றைய விடியலில்....


நீயின்றி என் வாழ்வே இல்லை என்றேன்

உன்னை பற்றி அறியாத பொழுது

நீ இருந்தால் என் வாழ்வே இருன்டு விடும் என்கிறேன்

உன் குணம் அறிந்து விட்ட பின்பு


உனை பிரிந்தால் நான் இல்லை என்றேன்

உன்னை புரிந்து கொள்ளாத நேரம்

உன்னையும் பிரிந்து வாழ கற்றுத்தந்தது

என் காதல் உனை புரிந்து கொண்ட வேளை


உனை என்னில் இருந்து பிரித்து விட்டது விதி என்றேன்

உன் போலி காதலில் மயங்கி

என்னை உன்னிடம் இருந்து காப்பாற்றியதே

அந்த விதியின் உருவில் என் உண்மைக் காதலே