காற்றலையில் என் குரல் கேட்ட மறுகணமே
உன் இதயத்தை என் காலடியில்
தொலைத்து விட்டதாய் கூறினாய்...
நானும் அப்படி தான்...
காதல் மலர்ந்தது...
காலங்கள் மறைந்தன.
ஓர் அந்தி மாலை பொழுதில் நாம்
இணைந்த அதே இணையத்தில்
நம் காதலை நிறுத்திக்கொள்ளலாம்
என்று நீ கூறிய போது என் கண்ணை
என்னாலே நம்பமுடியவில்லை..
உனை நீங்க முடியாமல் அழுது தவித்தேன்..
பொங்கிவந்த உன் நினவுகளை
ஆசையாக வடித்து மடலிட்டேன் உனக்கு..
உன் வாழ்வில் எனக்கோர் இடம் கேட்டு.
காதலர்களையும் காதலையும் நேசிக்க
தெரிந்த உனக்கு ,,ஏன் எற்றுக்கொண்ட
என் காதலை மறுப்பது போல் நடித்தாய்..
நேற்று நான் நேசித்ததும்..
இன்று நான் நேசிப்பதும்..
நாளை நான் நேசிக்க போவதும்
அன்பே உனை மட்டுமே....
அன்பே... என் தேடல் ஒரு
காணல் நீரென்றுதெரிந்திருந்தும்..
உனை நேசித்தஇதயத்தால்
உனை மறக்க முடியவில்லை...
உன் பெயர் சொல்லித்துடிக்கும்,,
உன் பெயர் சொல்லித்துடிக்கும்,,
இதயமது நின்று போனாலும்...
என் கல்லறை உன் பெயரை,
உச்சரித்துக்கொண்டே இருக்கும்...!!!
No comments:
Post a Comment