*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

2/21/2008

நீயின்றி நானிலை


என் இதயத்தில் நீனில்லை என்கிறேன்
உன் இதயமே நான் தானடி என்கிறாய்
என் பார்வையில் நீயில்லை என்கிறேன்
உன் கண்ணின் மணியே நான் தான்டி என்கிறாய்
என் மனசுக்குள் நீயில்லை என்கிறேன்
உன் மனசாட்சியே நான் தானடி என்கிறாய்
உன் வார்த்தைகள் பொய் என்கிறேன்
அதிலுள்ள வார்த்தைகளே நான் தானடி என்கிறாய்
மாலையிட வருவாயா என்கிறேன்
உன் கழுத்தே நான் தானடி என்கிறாய்
என் சுவாசத்திற்கு உயிர் கொடு என்கிறேன்
உன் சுவாசமே நான் தானடி என்கிறாய்
என்னை ஞாபகம் இருகிறதா என்கிறேன்
மறந்தால் தானே நினைக்க என்கிறாய்
கடைசி வரை கூட இருப்பாயா என்கிறேன்
உன் உயிரே நான் தான்டி என்கிறாய்
உள்ளம் திறந்து கேட்கிறேன்
உதரிவிடாதே என்கிறேன்
உரிமையுடன் சொல்கிறேன்
நீயின்றி நானில்லை என்கிறாய்
இத்தனையும் சொன்ன நீ இன்று
ஏன் என்னை ஏற்க மறுக்கிறாய்??

2/14/2008

கொஞ்சம் நில் காதலே


காக்க வைத்தல் காத்திருத்தல்
இரண்டுமே சுகமானது தான்
உனக்காக மட்டுமென்றால்


உன் நினைவுகளை சுமந்தபடி
உன் சம்மதமின்றி
காத்திருக்கிறேன் உனக்காக.....

இன்று மட்டுமல்ல என்னுயிர் ..
உள்ளவரையில்நீதான் ...
எந்தன் ஒளிவிளக்கு....
நான் வளர்க்கும் கனவுகளுக்கு
எல்லையே இல்லை...

அவையாவும் நிறைவேற நீ...
எந்தன் கரம் பிடிக்க வேண்டும்....
இன்றைய நாள்தனில்

காலத்தையும் கடந்து
உயிரோடு வாழும் காதலிடம்...
என் அன்பான வேண்டுகோள்....
உன்னால் முடிந்தால்
என்னவனிடம் என்னை
சேர்த்துவிட்டுச் செல்.....

2/13/2008

ஓர் நிலவின் காதல்


காற்றலையில் என் குரல் கேட்ட மறுகணமே
உன் இதயத்தை என் காலடியில்
தொலைத்து விட்டதாய் கூறினாய்...
நானும் அப்படி தான்...
காதல் மலர்ந்தது...
காலங்கள் மறைந்தன.

ஓர் அந்தி மாலை பொழுதில் நாம்
இணைந்த அதே இணையத்தில்
நம் காதலை நிறுத்திக்கொள்ளலாம்
என்று நீ கூறிய போது என் கண்ணை
என்னாலே நம்பமுடியவில்லை..
உனை நீங்க முடியாமல் அழுது தவித்தேன்..

பொங்கிவந்த உன் நினவுகளை
ஆசையாக வடித்து மடலிட்டேன் உனக்கு..
உன் வாழ்வில் எனக்கோர் இடம் கேட்டு.
காதலர்களையும் காதலையும் நேசிக்க
தெரிந்த உனக்கு ,,ஏன் எற்றுக்கொண்ட
என் காதலை மறுப்பது போல் நடித்தாய்..

நேற்று நான் நேசித்ததும்..
இன்று நான் நேசிப்பதும்..
நாளை நான் நேசிக்க போவதும்
அன்பே உனை மட்டுமே....

அன்பே... என் தேடல் ஒரு
காணல் நீரென்றுதெரிந்திருந்தும்..
உனை நேசித்தஇதயத்தால்
உனை மறக்க முடியவில்லை...
உன் பெயர் சொல்லித்துடிக்கும்,,
இதயமது நின்று போனாலும்...
என் கல்லறை உன் பெயரை,
உச்சரித்துக்கொண்டே இருக்கும்...!!!

2/05/2008

அஞ்சவில்லை....

கற்பனையில் கூட நான்

உன்னை என்னிலிருந்து தள்ளி
வைத்துதான் பார்த்ததுண்டு
இப்போது நீயும் அப்படித்தான்.....

வஞ்சகன் நீ எனை இன்றல்ல
என்றோ வஞ்சித்து விட்டாய்
உன் வஞ்சை தெரியாத என்
பிஞ்சு மனம் கூட உன் போலி
காரணங்கண்டு அஞ்சவில்லை.....

உன் வருகைக்காக.....!!!

கரைகள் தன் அலையை

பார்த்து நிற்கின்றன......!

கவிஞனின் கண்கள் தன்
கவிதையை பார்த்து நிற்கின்றன.......!!

நானோ உன் வருகையை
எதிர் பார்த்து நிற்கின்றேன்.......!!!