*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

2/15/2009

இறுதி முடிவு.............!!!

அன்று உன்னருகில் நானிருக்கையில்

தெரியவில்லை உனக்கு என் அருமை
ஆனால் இன்று விம்மித்தவிக்கிறாய்...!
புரியவில்லை...எனக்கு .....................!!!
என்னை உதறிவிட்ட உனக்கு
என் நினைவுகள் மட்டும் ஏன் என்று
உண்மைதான்......
உன்னருகிலேயே வாழ ஆசைப்பட்டதுண்டு
அன்று புரியவில்லை பேதை இவளுக்கு
உன் வஞ்சக மனம்.....!
என்ற போதும் நீ துடிப்பதை கண்டு
மனம் வாடுகின்றேன் .....
ஏனோ தெரியவில்லை உனை வெறுத்த எனக்கு
காதலை மட்டும் மறக்கத் தெரியவில்லை...!
அன்றொரு நாள் ஏங்கினேன்
உனை பார்க்கமாட்டோமா என....!
ஆனால் இன்று சொல்கிறேன்
என் கண்களுக்கு......
இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அவனை பார்த்திடாதே என...!

No comments: