*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

4/10/2009

என்னுள் நீ உன்னுள் நான்

என்னை நீ கேட்காமலே
என்னுள் நீ புகுந்துவிட்டாய்.....


என்னை நீ கேட்காமலே

என் நிழலாய் தொடர்கின்றாய்.......

என்னை நீ கேட்காமலே
என் உயிரோடு உறவாடுகின்றாய்.......

என்னை நீ கேட்காமலே
என்னோடு நீ வாழ்கின்றாய்.............

என் அனுமதியின்றி நீ செய்தவைகளில் எனக்கும் இணக்கமே......

ஆனால் என் அனுமதி இன்றி வந்தது போல் என்னனுமதி இன்றி சென்று விடாதே வாலிபனே..........

ஏனெனில் உன்னை பிரிந்து வாழ என்மனம் இனங்காது....

No comments: