*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

11/20/2007

எதிர்ப்பார்க்கும் கல்லறை!!!

என் இரு விழிகளில் நித்தமும்
காட்சியளிக்கும் - உன் பொன்
முகத்தை - இனி
எப்போதடா காண்பேன்

கடல் கடந்து நீ சென்றாலும்
என் மன அலைகளில் - உன்
நினைவுகளே
அடித்துக்கொண்டிருக்கிறது

காரணம் அன்று கனவில்
நீ வந்தாய் இன்று நினைவெல்லாம்
நீயாய் ஆனாய்!

அன்பே என் சுவாச்த் தொழிற்சாலை
இயங்கும் வரையும் - உன்
நினைவுகளையே காற்றாக
சுவாசிக்கிறேன் !!

நான் மடிந்தாலும் கூட
என் கல்லறை நித்தமும் - உனை
எண்ணி உன் வரவை
எதிர்ப்பார்க்கும்

No comments: