*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

11/20/2007

எனது காதல்






தொலைந்துபோனவாழ்விற்குள்
இன்றும்
தொலையாமல் பத்திரமாய் எனக்குள்
உனது
நினைவுக் கோலங்கள் மட்டும்
சட்டை பையில்
ஒட்டிக்கொண்ட கறையை போல
இதயத் தாள்களில்
கிழிக்கப்படாத பக்கங்களாய்
சிதையாத கவித் துளிகளாய்
உனது ஞாபகங்கள்
சிந்திய கண்ணீருக்குள்

சிக்குண்டு உருண்டோடும்
எனது ஏக்கங்கள்
கன்னத்தில் வழிந்தோடி
காய்ந்தே போகின்றது
என் கலைந்து போன
கனவுகளைப் போல
காயங்களால் மட்டுமல்ல
கண்ணீராலும் வாழ்கின்றது
எனது காதல்
கலங்கிய விழிகளின்
சாட்ச்சிக்குள்
என் காதலின் நேசமும்
கலந்தே உள்ளது

No comments: