*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

11/22/2007

கலப்படம்

மறக்க நினைத்தாலும்

மரணிக்காத நினைவுகள்
பசுமரத்தாணியாய்
பதிந்துவிட்டன....
வஞ்சி என் மனதை
கவி வரிகளால்
கடிவாளம் போட்டவனே
அஞ்சி ஓடினேனே-அம்பாய் விட்டாயே
கவிதைகளை
வார்த்தைகள் பாதிக்கவில்லை
வசனங்கள் தான்
வருத்திவிட்டன நெஞ்சை
ஏற்றுக்கொண்ட காதலுக்கு
ஏற்ற பரிசு தந்து விட்டாய்
எத்தனை காலம் காத்திருந்திருப்பாய்
என் ஒற்றை வார்த்தைக்காய்
ஆமாம் போட்டபின் தான்
அம்மா பெரிதாகிப்போனாவோ
அகன்று விட்டாயே
அன்பின்றி
அன்பர்களே..........
ஆண்களின் அழுகையை
ஆசை வார்த்தைகளை
அன்பொழுகும் கவிகளை
அள்ளி வழங்கும் இரத்தக் கடிதங்களை
நப்பாதீர்கள்
அனைத்தும் கலப்பங்களே

1 comment:

Anonymous said...

sari .. ungalukulle ivalavu thirami irukunu theriyama pochu. therinchiruntha autograph vangi irunthirupene.. ntc misses ur haha.. smile