நீ தான் என் உயிர் என்றேன்...இது வரை காலமும்
இனி என் வாழ்வில் நீ இல்லவே இல்லை என்றேன்
இன்றைய விடியலில்....
நீயின்றி என் வாழ்வே இல்லை என்றேன்
உன்னை பற்றி அறியாத பொழுது
நீ இருந்தால் என் வாழ்வே இருன்டு விடும் என்கிறேன்
உன் குணம் அறிந்து விட்ட பின்பு
உனை பிரிந்தால் நான் இல்லை என்றேன்
உன்னை புரிந்து கொள்ளாத நேரம்
உன்னையும் பிரிந்து வாழ கற்றுத்தந்தது
என் காதல் உனை புரிந்து கொண்ட வேளை
உனை என்னில் இருந்து பிரித்து விட்டது விதி என்றேன்
உன் போலி காதலில் மயங்கி
என்னை உன்னிடம் இருந்து காப்பாற்றியதே
அந்த விதியின் உருவில் என் உண்மைக் காதலே
No comments:
Post a Comment