*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

1/20/2008

நீயாக வேண்டும்


நான் நானாக இருக்கும் வேளை
நீ எவ்வழியாய் புகுந்தாய்
என் இதயத்தில்
செத்துப் போனேனடா-
உன் வசீகரப் புன்னகையால்

எனக்குள் உன்னை வீழ்த்தி
என்னை உயிர்ப்பித்தவனே
மெளனத்தின் நிசப்பதங்களில் கூட
நான் சத்தமின்றி யுத்தமின்றி
யாசிப்பது உந்தன் நிழலை மட்டுமே

சமரசம் புரிந்த உன் விழிகளில்
சரணடைந்த நாள் முதல்
சத்தியமாய் உன்னில்
பைத்தியமானேனடா

யாருமே இல்லாத தேசத்தில்
உன்னுடன் சிறகு இல்லாமலே
சிருங்காரமாய்
சிறகடித்துப் பறக்கின்றேன்
கனவெது நினைவெது புரியாது
தவிக்கின்றேன்
தினம் தினமும்!
உன் பெயரை பலமுறை
உச்சரித்துப் பார்க்கின்றேன்
ஏன் தெரியுமா?

என் கடைசி நிமிஷத்திலும்
கூட என்னுடன் என்னுள்
நீயாக வேண்டும்

No comments: