*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/08/2007

பெண்ணே நில் கொஞ்சம் கேட்டுச் செல்


நீ ஜடையில் இட்ட மல்லிகை பூ கூட

உன் வாடலின் முன்னறிவிப்பு

நீ நெற்றியிலிட்டா கரும் பொட்டு

வாழ்க்கை இருட்டின் அறிவிப்பு பலகை

உன் கை வளையல்கள்

கை விலங்கின் மறைமுகம்

தாலி கயிறு கூட அடிமையின் அடையாளமே

பெண்ணே புரிகிறதா??

இப்போது நீ அணியும் அத்தனையும்

உன்னை அழகுபடுத்த அல்ல அடிமைப்படுத்த என்று!!


No comments: