நீ ஜடையில் இட்ட மல்லிகை பூ கூட
உன் வாடலின் முன்னறிவிப்பு
நீ நெற்றியிலிட்டா கரும் பொட்டு
வாழ்க்கை இருட்டின் அறிவிப்பு பலகை
உன் கை வளையல்கள்
கை விலங்கின் மறைமுகம்
தாலி கயிறு கூட அடிமையின் அடையாளமே
பெண்ணே புரிகிறதா??
இப்போது நீ அணியும் அத்தனையும்
உன்னை அழகுபடுத்த அல்ல அடிமைப்படுத்த என்று!!
No comments:
Post a Comment