உறங்காத என் விழிகளுக்கு
உறக்கத்தை பரிசளித்து விட்டு போ
உன்னால் இறந்து கிடக்கும்
என் இதயத்தை உயிர்ப்பித்து விட்டு போ
தனிமையை தகர்த்க்தெறிந்து
இனிமைக்கு வழிவகுத்தவனே
சுவாசத்தில் தேன் தடவி சுகம் காணும்
ஜீவனுக்கு சுவனத்தை பரிசளித்து விட்டு போ
அன்பேஉறக்கம் இன்றி விழித்திருக்கும்
என் விழிகளுக்கு கனவுகளை சமர்ப்பித்து விட்டு போ
No comments:
Post a Comment