இத்தனைக் காலமும் நான் வாழ்க்கைப் பாதையில்
காதலில் விழாமலே பயணித்தேன்
காரணம் அங்குள்ள போதையால்
என்னை சீராட்டி சோறூட்டி வள்ர்த்த தாயையும் தாயன்பையும் மறந்துவிடுவேன் என்பதால்,
ஆனால் அங்கிருப்பது போதையல்ல அன்பு மட்டுமே என்பதை
உன்னை காதலிக்கும் போதே உணர்ந்து கொண்டேன்
எல்லோரையுமே நேசிக்கத் தெரிந்த எனக்கு
உன்னை மட்டும் அதிகமாக நேசிக்கும் வித்தையை கற்றுக்கொடுது விட்டாயே எப்படியடா?
எத்தனையோ துன்பங்களும் எண்ணங்களும்
மனதிலே நில்லாத ரயில் போல ஓடிக்கொண்டே இருந்தாலும்
உன்னைப் பார்த்த நொடிதனில் எங்கே ஒழிந்துகொண்டனவோ
நான் அறியேனடா..............
எத்தனையோ மொழிகள் அத்தைனையும்
உன் கண்கள் என்னிடம் பேசிடும் மொழிகள் போலாகுமா?
ஓராயிரம் வார்த்தைகள் என்னில் மொழி தெரியாமல் சிக்கிக் கொண்டிருக்கின்றன
என்றைக்கு நீ எனக்கு முழுவதுமாக சொந்த்மாகின்றாயோ
அன்றைக்கே அவை கண்ணீராக வெளிவரும்.............
அந்த நாளை எண்ணிக்காத்திருக்கின்றேன் பொருமையோடு(உனக்காகவே)
No comments:
Post a Comment