*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/15/2007

புரியும்..........


காதல் இளமையின் சிரிப்பு
இதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
அன்பே
உன் பார்வையில் பாசத்தை
மட்டுமே பார்த்தேன்
பலி கொள்ளும் நோக்கத்தை அறியேன்
பிரிவு என்னும் கயிறைத் திரித்து
என் இதயத்தை கூக்கிலிட்டதற்கு பதிலாக
என்னையே கொலை செய்திருக்கலாம்
கண்ணீராவது மிச்சப்பட்டிருக்கும்
பரவாயில்லை என் இதயம் புரியாமல்
சீண்டி பார்க்கின்றாய்
என் நிலமை என்றாவது
உனக்கு புரியும் அப்போது
உன் இதயமும் சீண்டப்பட்டிருக்கும்

No comments: