என்னிடம் எதுவுமில்லை
என்றாலும்
என் கண்ணீரையாவது
நம் காதலுக்காக
காணிக்கையாக்குகிறேன்.....
இருந்தும் ஏற்கனவே
எல்லாம் இழந்தவள் நான்
ரணப்படுத்தப்பட்ட
என் இதயத்தினுள்
உன்னையும் சுமந்து
இனியும் என்னால்
அவஸ்த்தப்பட
இஸ்டமில்லை
நீ..........வாழ வேண்டியவன்
கண்ணே
என்னை போல் இறந்து வாழாது
வாழ்ந்துவிட்டு இறந்து போ
அதுவரைக்குமாவது
என்னோடுஎதிரே நின்று ......
தொந்தரவு செய்ய மாட்டாயென
எதிர்ப்பார்க்கின்றேன்
No comments:
Post a Comment