*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/03/2007

சுகமான சுமைகள்..



உன் கண்களைப் பார்த்திடும்
பொழுதினில் குழப்பமான என் உள்ளம்
எல்லாவற்றையும் மறந்து
உன் அழகான உருவை மட்டும்
தாங்கிக்கொண்டிருக்கின்றதே ......
எங்கனம்?


உன் சிரிப்பை ரசித்திடும்
பொழுதினில்
இந்த உலகிலேயே
நான் மட்டுமெ அதிர்ஷ்டசாலியாக
தோன்றுகிறதே காரணம் அறிவாயா?
உன் சிரிப்பு என் வாழ்வே
நீதானடி என்று ஆசி கூறுகின்றதே.......
எங்கனம்?


உன் அமைதியான அணைப்புகள்
கூட நான் என்றென்றும்
உனக்கே உரியவன் என்றே
இனித்திடுதே.......
எங்கனம்?


உன் அன்பு முத்தங்கள் கூட
நான் இருக்கின்றேன் எதற்காக
இத்தனை சோகங்கள் என்று
ஆறுதல் கூறுகின்றதே....
எங்கனம்?


எத்தனை சோகங்கள்
வந்தாலும் நீ என்னுடன்
இருக்கும் வரையில்
அத்தனையும் சுகங்களே.........

No comments: