*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/08/2007

உனக்காக


சேகரித்த உன் நினைவுகளையும்

உறங்காத என் ஏக்கங்களையும்

நாளைய விடியலில்

உன் வருகையின் எதிர்ப்பார்ப்பையும் மட்டுமே

காதலின் சின்னமாக என்னிடம் விட்டுச் சென்றவனே

நம் காதலின் இறந்த காலத்தை

அன்று போல் இன்றும் இன்று போல் என்றும்

பசுமையுடன் நேசிக்கின்றேன்

உன் நினைவுகளை மட்டும் சுமந்த வண்ணம்

உன் வருகையை எதிர்ப்பார்த்து

நீங்காத நினைவுகளுடன்

சாகாமல் வாழ்கின்றேன் உனக்காக

No comments: