சேகரித்த உன் நினைவுகளையும்
உறங்காத என் ஏக்கங்களையும்
நாளைய விடியலில்
உன் வருகையின் எதிர்ப்பார்ப்பையும் மட்டுமே
காதலின் சின்னமாக என்னிடம் விட்டுச் சென்றவனே
நம் காதலின் இறந்த காலத்தை
அன்று போல் இன்றும் இன்று போல் என்றும்
பசுமையுடன் நேசிக்கின்றேன்
உன் நினைவுகளை மட்டும் சுமந்த வண்ணம்
உன் வருகையை எதிர்ப்பார்த்து
நீங்காத நினைவுகளுடன்
சாகாமல் வாழ்கின்றேன் உனக்காக
No comments:
Post a Comment