*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/08/2007

என்று வருவாய் நீ







கண்ணிமைக்குள் குடியிருக்கும்
உன்னை வடிக்கின்றேன்
கவிதைகளாய்பேனா முனைகளால்
கொவ்வை இதழால் சிரிக்கும் உன்னை
தரிசிக்கிறேன் தினமும்ம் உன் அன்பிற்காக
என மேல் காதல் கொண்ட உன்னை
நெருங்கத் துடிக்கின்றேன்
உன் காமக் கண்களுக்காக
என்றாலும் நீ நடத்தை கெட்டவன்
மரம் விட்டு மரம் தாவும் குரங்கினம்
என்றெல்லாம் வர்ணிக்கிறது
உன்னை இச்சமுதாயம்.....
கேட்டதும் துடிக்கிறது என் மனம்
அழுகிறேன் மனசுக்குள்
தவிக்கின்றேன் ஆறுதலடைய முடியாமல்

உன்னைக் காதலிக்கும் முதல் நாளாய்
நான் படும் துன்பம் கொஞ்சமல்ல
என்றாலும் தள்ரவில்லை
கசப்பென்று துப்ப முடியாமலும்
இனிப்பென்று விழுங்க முடியாமலும்
தவிக்கின்றேன் நான்

என்றாலும் உன்னை பார்த்த முதல் நாளாய்
உனக்காக காத்திருக்கின்றேன்
உன் மடி மீது துயில
என்று வருவாய் நீ????????????

No comments: