*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/09/2007

கண்ணோடு கலந்து விடு.............


ஏங்குதே உன் அன்புக்காக
கன்னி இவள் மனது
நடு நிசியும் சுட்டெரிக்கும் நாற்றிசையும்
உலா வந்து காளையவன் கனவினிலே
கண்ணயர்ந்து போனேனே
வெண்மதியாய் உன்னைக் காணும் போது
மேகத்துக்கு பிடிக்காமல்
சுற்றமும் மறந்து விடுகின்ற வேளையில்
நீ என் கண்ணோடு கலந்து விட
நான் உன் நெஞ்சோடு சேர்ந்திடுவேன்
மன்னவனே கண் மலரும் போது
உன் நினைவுகள் பூத்துக்குலுங்குது
கண்ணா நீ வந்து விடு சீக்கிரமே
வைகறையில் கூடி வாழ்ந்திட

No comments: