*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/12/2007

காதலித்து விடாதே நண்பியே...............

நண்பியே காதலில்..கால் பதித்து விடாதே
கண்ணீரை சொந்தமாக்கி விடுவாய்
இன்பத்தின் முடிவுகள்

கன்னத்தில் கண்ணீராய் மாறிவிடும்
காதலித்து விடாதே நண்பியே

தனிமையில் புலம்பி
இருளில் காத்திருந்து
காலப்போக்கில்
பைத்தியக்காரியாகிவிடுவாய்
காதலித்து விடாதே நண்பியே

கடிதங்கள் எழுதியே
பேனா மையை முடித்து
உன்னுயிரையும் உயிரானவனுக்கு
சமர்ப்பணம் செய்துவிடுவாய்
அவனோ அலங்கார மேடையில்
ஆனந்தமாய் இருப்பான்
காதலித்து விடாததே நண்பியே

2 comments: