அடித்த கைகள் அணைத்திடும்
பொழுதினில் இனித்திடும்
எண்ணங்கள்
அணைத்த கைகள் அடித்திடும்
வேளையில் சோர்ந்திடும்
சோகம் என்னவோ?
பேசிடும் நேரம் பேச
மறுத்த இதழ்கள் நீ
மெளனித்திடும் போது
பேச ஏங்கிடும் மனம் ஏனோ..
உன் கோபத்தை
கூட ரசிக்கத் தெரிந்த எனக்கு
உன் மெளனமதை
தாங்கிக்கொள்ள
வழி சொல்லிடு என் காதலே..........
ஏன் என்னை வெறுக்கின்றாய்
புரியவில்லை.
சொல்லிவிடு காரணத்தை
மெளனம் தாங்காது என் இதயம்
No comments:
Post a Comment