*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/05/2007

குட்டி குட்டி கவிதைகள்





மழை
விண்ணுக்கும் மண்ணுக்கும்
காதலா?
புறப்பட்டு விட்டார்கள்
தூதுவர்கள் துளித் துளியாய்


முதியோர் இல்லம்
நிம்மதி ஊசி நூல்
தேடும் கந்தல் ஆடைகளின்
கனத்த கோட்டை

சமாதானம்
சாகாவரம் பெற தினம்
தினம் செத்துப் பிழைக்கும்
பீனிக்ஸ் பறவை.......


மேகங்கள்
நீலப்பட்டாடைக்கு
நூல் தேவையோ....
இதோ பஞ்சு மூட்டைகளின்
நெஞ்சை அள்ளும் பவனி....


புன்னகை
விற்க இயலாத
விலைமதிப்பில்லாத விதை
வினியோகம் செய்வதற்கு
இங்கு பலருக்கு பஞ்சம்..

No comments: