நான் நானாக இருக்கும் வேளை
நீ எவ்வழியாய் புகுந்தாய்
என் இதயத்தில்?
செத்து போனேனடா
உன் வசீகர புன்னகையால்
உனக்காக நான் காத்திருக்கவில்லை
உனக்காகவே பூத்திருக்கேனோ
என்றொரு கேள்வி
என் மனச் சாலையில்
தினம் தினம் உன் பெயரை
உச்சரித்து பார்க்கிறேன் ஏன் தெரியுமா?
என் கடைசி நிமிடத்திலும் கூட
என்னுடன் என்னுள் நீயாக வேண்டும்
சொல்லிவிட்டாய் உன் காதலை
பதில் சொல்லும் என் மனம் பூக்கும்
மெளனத்தை தாங்கிடுமா உன் இதயம்?
2 comments:
உன் கோபத்தை கூட
மலர் போல் தாங்கிடும்
என் இதயத்தால் உன்
மெளனத்தைத் தாங்க
முடியவில்லை செல்லமே
உன் திருவாய் மலர்ந்து
ஒர் வார்த்தை பேச
மாட்டாயா... பேசி
விடு பெண்ணே இனியும்
வேண்டாம் உன் மெளனம்
என்னைக் கொல்லாமல்
கொல்கின்றதே
super kavithai keep it up
Post a Comment