*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/04/2007

நான் உனக்காகவே ஆனால் நீ எனக்காகவா?


ஓர் அகதியாய் வாழ்ந்தேன்
உன்னோடு வாழலாம் என்று

உன்கூடவே இருந்தேன்
நீ சுவாசிக்கும் காற்றையே

சுவாசிக்கலாம் என்று
உன் திசையிலேயே நடந்தேன்

உன் நிழலாய் மாறினேன்
உன்னை விட்டு பிரியாமல்
உன் நிழலாய் வாழ்வேன்
என்று உனக்கு உணர்த்தவே

நான் உனக்காகவே
ஆனால் நீ எனக்காகவா?

No comments: