*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/04/2007

நான் ,நீ........


மழைத்துளி விழுந்து
பூமி நனைந்தாலும்
பூமி நனைவது
மழைக்கு மட்டுமா?

இரா வானில்
நட்சத்திரங்கள் இருந்தாலும்
நட்சத்திரங்கள் இருப்பது
இரவில் மட்டுமா?

கருங்குயில்கள்
பாட்டிசைத்தாலும்
பாட்டிசைப்பது
குயில்கள் மட்டுமா?

எனக்கு இருப்பது
நீ மட்டும் தான்
என்றாலும் உனக்கு
இருப்பது நான் மட்டுமா?

No comments: