*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/05/2007

நீங்காத நினைவுகள்

நீ என்னை சாதரணமாகத்தான்

பார்த்துச் சென்றாய்
ஆனால் அந்த பார்வையில்
என் இதயம் இங்கு
ரணமாக்கிப் போனாய்
நீ அறிய நியாயமில்லை.....


உன் பிரிவில் என்
இதயம் ரணமகிப்
போன போது ஆறுதல்
சொன்னது உன்
நினைவுகள் தான்

பிரிவின் வேதனை
தெரிந்திருந்த போதும்
உன்னை பிரிந்த போது தான்
அதை உணர்ந்துக் கொண்டேன்

நீ எனைப் பிரிந்து போன
இடைவெளியை என் கண்ணீர்
தான் நிரப்பிக் கொன்டிருக்கிறது
அன்று நீ கண்களால்
பேசிய பாசையின் அர்த்தம்
எனக்கு புரியவில்லை...

ஆனால் இன்று அதன் அர்த்தம்
தெரிந்தும் கூட என்ன பயன்
நீ என் அருகில் இல்லையே...

நீ தூரதேசம் சென்றாலும்
திரும்பிவரும் போது
என் இதயததேசத்தில்
நிச்சயம் உனக்கக ஓர்
இடம் காத்திருக்கும்..

No comments: