ஆயிரம் சொல்லுண்டு
அகிலத்தில்ஆனாலும்
ஒன்றுண்டு நெஞ்சத்தில்
அன்பிற்கும்ண்டு பலவகை
அம்மாவின் வகையொன்றேதான்
அணைப்புகள் கொடுத்திடும்
சுகங்கள்அன்னையின்
அணைப்பிற்குமுண்டோ ஈடு
அன்றவள் இருக்கையில்
இல்லை அறிவு ஏழை என்வசம்
ஆண்டவன் அழைத்திட்ட
பின்னாலே அழுகுது இதயம்
வெறுமையாகவே
அன்னையர் தினம் வரும்
வேளையிலேஅனுபவம்
தன்னிலே ஒரு சொல் கேளீர்
அருமையாய் பேணி
அம்மாவைக் காத்திடும்
ஆவியாய் அவள் மறைந்த
பின்னாலே அழுது புரளுவதும்
ஆயிரம் பேசுதலும்
அமைதியைத் தராது
அடித்தே சொல்லுவேன்
No comments:
Post a Comment