*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/04/2007

மறந்து விடாதே....

கடந்தகால கனவுகளை

கண்ணீரில் கழுவிப்பார்கிறேன்......
அறிமுகத்தில் பிறந்து
அன்பில் உதித்து,
காதலில் ஆரம்பித்தோம்.!!!
நழுவிப்போன நினைவுகளை
அழைக்கிறேன்.......
.
எங்கிருந்தோ வந்து
எதிர்பாராது மோதி
இதயங்கள் சேர்த்தோம்
தூங்காத இரவோடு
ங்கித்தவிக்கிறேன்.
நமக்கிடையில் ஏனிந்த தூரம்
என்று இதயம் எரிகின்றது....
பூக்கின்ற பூக்கள் எல்லாம்
பூஜைக்கு வருவதில்லை.
மலர்கின்ற மலர்கள் எல்லாம்
மாலையாய் சிறப்பதில்லை.
ஆனால் காதலன் உனக்காக
என் மனதில் பூ ஒன்று பூத்திருக்கும்.
இந்த காதலியின் இதயம்
உனக்கக கல்லறை வரை
காத்திருக்கும்!!!

உன் நினைவுகளால் தினம் தினம்
உள்ளத்தாலும் உடலாலும்
வாடும் இந்த உயிருள்ள
உன் காதலியை மறந்து விடாதே........!!

No comments: