*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/04/2007

காத்திருக்கும் இவள்

கண் இமைக்கும் நேரத்தில்

கண்ணெதிரே தோன்றினாய்
கண்விழி புகுந்து
கற்பனையையும் தந்தாய்

உன்னை விட்டுப்
பிரியும் போதெல்லாம்
என் மனம்
ரணமய் மாறிடும்
ஆனாலும் என்னை
விட்டு பிரிந்து நீ
சென்ற பின்பும்
உன் வாசம் என்னை
விட்டு பிரிவதில்லை..!

இப்பொழுது புரிகிறதா?
நீ என் உயிரில் மட்டுமல்ல
என் சுவாசத்திலும்
உரைந்துவிட்டாய் என்று..!

எதற்காக உன்னை
காதலித்தேன் என்பது
எனக்கு புரியவில்லை!
ஆனால் எதற்காகவும்
உன்னை இழக்கமாட்டேன்
என்பது மட்டும் புரிகிறது...........

உன்னை சேர்ந்திட
மனம் ஏங்குதே...
என் அன்பே உனக்கு
என் வலி புரிகிறதா?
உன்னை சேரும்
நாளை எண்ணிப்பார்பதிலும்
ஓர் சுகம் கண்டேன்....
உன்னக்காகவே வாழ்ந்திட
நினைக்கும் போதே

இவ்வளவு சுகம் என்றால் ....
உன்னோடு வாழ்ந்திடும்
நாளை எண்ணி எண்ணித்
தவமாய் தவமிருக்கிறேன்.......!!!

No comments: