*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/06/2007

நீ இன்றி நானில்லை




என் இதயத்தில் நீ இல்லை என்கிறேன்
உன் இதயமே நான் தானடி என்கிறாய்
என் பார்வையில் நீ இல்லை என்கிறேன்
உன் கண்ணின் மணியே நான் தான்டி என்கிறாய்

என் மனசுக்குள் நீ இல்லைய் என்கிறேன்
உன் மனசாட்சியே நான் தானடி என்கிறாய்

உன் வார்த்தைகள் பொய் என்கிறேன்
அதிலுள்ள எழுத்துக்களே நான் தானடி என்கிறாய்

மாலையிட வருவாய என்கிறேன்
உன் கழுத்தே நான் தானடி என்கிறாய்

என் சுவாசத்திற்கு உயிர் கொடு என்கிறேன்
உன் சுவாசமே நான் தானடி என்கிறாய்

கடைசி வரை கூட இருப்பாயா என்கிறேன்
உன் உயிரே நான் தான்டி என்கிறாய்

உள்ளம் திறந்து கேட்கிறேன் உதறி விடாதே என்கிறேன்
உரிமையுடன் சொல்கிறேன் நீ இன்றி நானில்லை என்கிறாய்

No comments: