*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/03/2007

நீ உணரவில்லையா?.........


சூரியனின் வதனத்தில்

உன் கண்கள்

இருப்பதனாலேயோ

அது என்னை எரிக்கிறது



வீசும் காற்றில்

உன் சுவாசம்

கலந்ததாலேயோ

அது என்னை

சுடுகின்றது


என் உயிரில் உன்

உயிர் கலந்திருப்பதாலேயோ

என் உயிர் உருகுகிறது


என் இதயத்தில் உன் காதல்

பூத்திருப்பதாலேயோ

என் இதயம்

வாடிக்கிடக்கிறது


அன்பே உன் ஒவ்வொரு

செய்கையும் என்னை

பாதிக்கும் போதுதினமும்

நான் அர்த்த ராத்திரியில்

விடும் அர்த்தமுள்ள

இரத்தக் கண்ணீர்

உன்னை ஒன்றும்

செய்யவில்லையா?

No comments: