*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/16/2007

கனவாய்க் கலைந்தாலும் நினைவாய் உன்னோடு நான்


கண்களில் கண்ணீர் துளிகள்
நீ தொட்ட என் கன்னங்களின்
வண்ணம் கலைக்கின்றன.......


உன் நினைவுகள் என் நிலமை
கண்டு வலியால் துடி
துடித்துக்கொண்டிருக்கின்றன.

உன் நினைவுகளால் கூட
நான் படும் வேதனையை
தாங்கிக்கொள்ள்முடியைவில்லையே
உன்னால் எப்படியடா முடிந்தது?
உன் நினைவுகள் என்றுமே
வண்ண்ம் மாறுவதில்லை
உன் அன்பின் நிறம் மட்டும் மாறியதேனோ?
உன் கனவுகளில் எனை
வைத்ததாலோ என்னவோ
நான் கலைந்து விட்டேன்.........
ஆனால் என் உயிரில் உனை
வைத்ததாலேயோ நீ இன்னும்
எனை விட்டு விலகாமல்
உயிரற்ற நம் காதலுக்காக
உயிருள்ள எனை வதைக்கின்றாய்?
உன் உயிர் கூட உனதல்ல
என்றொரு நாள் நீ கூறியதன்
அர்த்தம் இதுவா?
என் உயிருள்ள வரை
என் உண்மைக் காதல்
உனக்கே சொந்தமடா.........

No comments: