*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/16/2007

விதியை வென்ற காதலின் நினைவுகள்


உன்னை என்னிடம் சேர்த்ததும் விதி
நம் இருவரையும் உயிரொடு
கலந்து விடச் செய்ததும் விதி
இன்று நம் இருவரையும்
பிரித்துவிட்டுச் சென்றதுவும் விதியே

யார் மேல் யார் அன்பு செய்தால் என்ன
கடைசியில் அன்பு ஜெயிப்பது சில வேளையே
பல வேளைகளில் அன்பை வென்றிடும் விதி......
அதற்கும் காதல் வந்தால் புரியும்
பிரிவின் வேதனை...............என்ற போதிலும்
ஒரே ஒரு சந்தொஷம் கூட உண்டு...
பிரிந்த நம் காதலிலும்
என்ன தான் விதி ஜெயித்தாலும்
நம் மனதினில் நாம் கொண்ட
அன்பையும் அது விதைத்த நினைவுகளையும்
அதனால் அழிக்க முடியவில்லையே....???
ஆனால் அந்த நினைவுகள்

விதியை அழிப்பதற்கு பதிலாக
நம்மை நாள்தோறும் வதைக்கின்றது.....

No comments: